அமெரிக்க-மெக்சிகோ எல்லையின் பெரும்பகுதியை கட்டுப்பாட்டில் எடுக்க அமெரிக்க இராணுவத்திற்கு ட்ரம்ப் உத்தரவு
பசிபிக் பெருங்கடலில் இருந்து ரியோ கிராண்டே வரை செல்லும் நில எல்லையை ஒட்டிய 60 அடி துண்டு பென்டகனிடம் ஒப்படைக்கப்படும்.
பசிபிக் பெருங்கடலில் இருந்து ரியோ கிராண்டே வரை செல்லும் நில எல்லையை ஒட்டிய 60 அடி துண்டு பென்டகனிடம் ஒப்படைக்கப்படும்.
டரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாடுகளுக்கு நேரடி முன்னுதாரணமாக அடோல்ஃப் ஹிட்லரின் நாஜி ஆட்சியால் உருவாக்கப்பட்ட, விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு மக்களை “தண்டனைக்கு உரியவர்கள்” (Willensstrafrecht) என்று அறிவிக்கும் கருத்து உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சர்வாதிகார அதிகாரங்களை செயல்படுத்த முனைகிறார். ஆனால், அவர் நிதிச் சந்தைகள் மற்றும் பில்லியனர்களின் வேலைக்காரராகவே இருக்கிறார்.
ஒட்டுமொத்த நிதியியல் அமைப்புமுறையும் 2008 மற்றும் மார்ச் 2020 இல் ஏற்பட்ட நெருக்கடியைப் போன்ற அல்லது அதைவிட மோசமான மற்றொரு நெருக்கடியின் விளிம்பில் இருப்பது தெளிவாகத் தெரிந்த நிலையில், இந்த "இடைநிறுத்தம்" ஏற்பட்டது.
முதல் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் விதிக்கப்பட்டு ஜனாதிபதி பைடெனின் கீழ் பராமரிக்கப்பட்ட முந்தைய வரி உயர்வுகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால், சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளின் அளவு இப்போது சுமார் 120 சதவீதமாக உள்ளது. இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன் இடம்பெற்றதில்லை.
பாலஸ்தீன மக்களை இடம்பெயரச் செய்ய அல்லது அழித்தொழித்து அவர்களின் நிலத்தை இணைப்பதற்கான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் குறித்த புது நிலைமையை வழங்குவதற்காக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பிற்காக வாஷிங்டனுக்கு கடந்த திங்களன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் உள்ள பாசிசவாதிகளுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. ஆனால், இந்த இயக்கம் ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொண்டு முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்தின் மூலமாக மட்டுமே முன்னேறிச் செல்ல முடியும்.
சூழ்நிலைமையை மிகத் தெளிவாகக் கூற வேண்டும்: ட்ரம்ப் நிர்வாகம் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு திட்டமிட்டு முறையாக வேண்டுமென்றே நகர்ந்து வருகிறது.
சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் தலையீடு, தொழிலாளர்களுக்கு கல்வி கற்பிப்பதையும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் அரசியல் ஆதரவாளர்களிடம் இருந்தும் தொழிலாளர்களை சுயாதீனமாக ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்திற்காக அணிதிரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த சுங்கவரி விதிப்பு நடவடிக்கைகள் "அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டது" என்ற பதாகையின் கீழ் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், அமெரிக்காவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலுமோ, ஒரு உலகளாவிய உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கின் விளைவாக உருவாக்கப்படாத ஒரேயொரு பண்டம் கூட இல்லை.
ஈரானின் தாக்கும் எல்லைக்குள் இருக்கும் இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவிற்கு பென்டகன் அதன் ஆறு B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களை அனுப்பியுள்ளது. இது, மொத்த அமெரிக்க ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களில் 30 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
பாசிச அரசியல்வாதிகள் அல்லது கட்சிகளைத் தடை செய்வதற்கான முதலாளித்துவ அரசு மேற்கொள்ளும் முயற்சிகள், போரையோ அல்லது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையோ நிறுத்தப் போவதில்லை. மாறாக இது, இடது மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு களம் அமைக்கும்.
அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்த உரிமைகளை (பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம்) பயன்படுத்தியதற்காக சிறைத்தண்டனை மற்றும் நாடுகடத்தலை எதிர்கொள்ளும் நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்களில் மொமொடு தாலும் ஒருவர்.
அமெரிக்காவில் பிரதான பல்கலைக்கழகங்களில் உள்ள நிர்வாகங்கள், ட்ரம்ப் நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான பயங்கரவாத ஆட்சியை எளிதாக்குவதில் முற்றிலும் மோசமான பாத்திரத்தை வகித்து வருகின்றன.
ட்ரம்பின் வாகன இறக்குமதி வரிகளை ஐக்கிய வாகனத்துறை (UAW) தொழிற் சங்கம் அங்கீகரிப்பதென்பது உலகப் போருக்கு ஆதரவளிக்கும் பிரகடனத்திற்கு நிகரானதாகும்.
ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக, இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க வேலைநிறுத்தத்தை தொழிலாளர்களின் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் CITU திடீரென முடிவுக்குக் கொண்டு வந்தது.
கேரளாவில் வறிய ஊதியம் பெறுகின்ற, பெரும்பாலானோர் பெண்களாக இருக்கும் பொது சுகாதார தொழிலாளர்கள், தங்களது வேலை நிறுத்தத்தின் ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ளனர்.
விரிவடைந்து வரும் ஏகாதிபத்தியப் போர் மற்றும் வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மையின் அழுத்தத்தின் கீழ், துருக்கியில் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருவதால், உலகளாவிய பரிமாணங்களைக் கொண்ட ஒரு புரட்சிகர நெருக்கடி உருவாகி வருகிறது.
“எமக்கு தொழில் நிரந்தரமில்லை. பொருள் விலை அதிகரிக்கும் அதே நேரம், எப்போதாவது கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்வது எப்படி? எமது பிரச்சினைகளுக்கு தீர்வு தருவதாக வாக்குறுதி கொடுத்தாலும் கடந்த அரசாங்கங்களைப் போலவே இந்த அரசாங்கமும் எங்களை ஏமாற்றிவிட்டது.”
கோவிட்-19 பெரும்தொற்று, பாரிய சமூகத்தின் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு முதலாளித்துவத்தின் இயலாமையையும், இந்த சமூக அமைப்புமுறை பிற்போக்குத்தனத்தின் உச்ச நிலையில் உள்ளது என்பதையும் அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது.
பாரிஸில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற "விருப்ப உச்சிமாநாட்டின்" கூட்டணி, உக்ரேனில் ஐரோப்பாவின் இராணுவத் தலையீட்டை அதிகரிப்பதை இலக்காக கொண்டிருக்கிறது. இந்த மாநாடு, தேவைப்படும் மீள்ஆயுதமயமாக்கலுக்கான திட்டங்களை மேற்கொள்வதுக்கு, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கடுமையான சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
வரவிருக்கும் மகத்தான போராட்டங்களுக்குத் தேவையான புரட்சிகரத் தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்ப, அதில் இணைந்து கொள்ளுமாறு தொழிலாளர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
யேமன் மீது தாக்குதல் நடத்துவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் சதித்திட்டம் குறித்த வெளிப்பாடு, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, தொகுக்கப்படுகின்றன, தொடங்கப்படுகின்றன மற்றும் மோசடியாக நியாயப்படுத்தப்படுகின்றன என்பதற்கான ஒரு பார்வையை வழங்குகிறது.
இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கவும், எஞ்சியிருக்கும் மக்களை உள்நாட்டில் இடம்பெயரச் செய்யவும், "உயிர்வாழ்வதற்கு அவசியமான குறைந்தபட்ச கலோரி அளவை" மட்டுமே வழங்கவும் தயார் செய்து வருவதாக மூன்று சர்வதேச வெளியீடுகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் நடந்த பாரிய போராட்டங்களுக்கு மத்தியில், எர்டோகனின் முக்கிய போட்டியாளரான இமாமோக்லு கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.
அரசியலமைப்பிற்கு விரோதமான ட்ரம்பின் நிர்வாக உத்தரவுகளுக்கு எதிராக மொமொடு தால், தாக்கல் செய்த வழக்குக்கு விடையிறுப்பாக, ட்ரம்ப் நிர்வாகம் தாலை தடுத்து வைத்து நாடு கடத்த முயன்று வருகிறது.
ட்ரம்ப் நிர்வாகம் காஸா பகுதியை இனரீதியில் சுத்திகரித்து இணைத்துக் கொள்வதற்கான அதன் திட்டங்களை இரட்டிப்பாக்கி வருகின்றது. இந்த நிலையில், வாஷிங்டனின் மேலாதிக்கத்தின் கீழ் மத்திய கிழக்கை மறுஒழுங்கமைக்க அமெரிக்க-இஸ்ரேலிய போரை திட்டமிட்டு தீவிரப்படுத்துவதன் பாகமாக, அமெரிக்கா யேமனையும் இறுதியில் ஈரானையும் இலக்கில் வைத்து ஒரு புதிய இராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் பதவியேற்று இரண்டு மாதங்களாகியுள்ள நிலையில், ஜனாதிபதி பதவி என்பது சர்வாதிகாரத்தின் கட்டுப்பாட்டு மையமாகவும் திட்டமிடும் மையமாகவும் மாறியுள்ளது.
கடந்த செவ்வாயன்று, இஸ்ரேல் காஸாவில் உள்ள 400 க்கும் மேற்பட்ட மக்களை படுகொலை செய்துள்ளது. மேலும், காஸாவில் எஞ்சியிருக்கும் ஒட்டுமொத்த பாலஸ்தீனிய மக்களையும் திட்டமிட்டு அழித்தொழிப்பது அல்லது அங்கிருந்து இடம்பெயரச் செய்வதை நோக்கமாகக் கொண்ட இனப்படுகொலையின் ஒரு புதிய கட்டத்தை இஸ்ரேல் தொடக்கியுள்ளது.
விவசாயிகளுக்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தாலும், அவற்றில் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
நாஜிக்களின் போலி-சட்ட கையேட்டால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் முதலாளித்துவ தன்னலக்குழு, அமெரிக்காவில் ஒரு போலீஸ் அரசை திணிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
ட்ரம்பும் அவரது பாசிச ஆதரவாளர்களின் உள்வட்டமும் சட்ட மற்றும் அரசியலமைப்பு கட்டுப்பாடுகளை திட்டமிட்டு தகர்த்து வருகின்றனர். ஒவ்வொரு அத்துமீறலும் முழுமையான அதிகாரத்தின் இன்னும் அதிக திமிர்த்தனமான வலியுறுத்தல்களுக்கு களம் அமைக்கின்றன.
பல தசாப்தங்களுக்கு முன்பு ஒரு அரச சேவையாக இருந்த தபால் சேவை, இன்று எல்லா நாடுகளிலும் முதலாளித்துவ நிறுவனங்களின் இலாபம் கறக்கும் வணிகமாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கையிலும் இதுவே நடந்து வருகிறது.
காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை பெருமளவில் வெளியேற்றுவது மற்றும் அவர்களை வலுக் கட்டாயமாக மீள்குடியேற்றுவது தொடர்பாக சூடான், சோமாலியா மற்றும் சோமாலிலாந்து அதிகாரிகளுடன் அமெரிக்கா, இஸ்ரேலிய அரசாங்கங்கள் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளன.
20 ஆம் நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களில் தோல்வியடைந்து கொடூரமான குற்றங்களைச் செய்த பின்னர், ஜேர்மனியை ஒரு ஆக்கிரோஷமான இராணுவ சக்தியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினரும் (CDU/CSU) சமூக ஜனநாயகக் கட்சியினரும் (SPD) ஒரு பாரிய மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) சமரசமற்ற செய்தி அறிக்கையிடல், ஆழமான பகுப்பாய்வு மற்றும் பரந்த அளவிலான எதிர்ப்பை பரந்த அளவில் சாத்தியமான அளவுக்கு தொடர்ந்து அணிதிரட்டுவதை உறுதி செய்வதற்கு உங்கள் நிதி உதவி இன்றியமையாததாகும்.
சிங்களப் பேரினவாத ஜே.வி.பி. மற்றும் அதன் தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இலங்கையின் புதிய வலதுசாரி, ஏகாதிபத்திய சார்பு அரசாங்கத்தின் மீது முன்னிலை சோசலிசக் கட்சி மாயைகளை விதைத்து வருகிறது.
தொழிலாளர்கள் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசரமாகிவிட்டது, என்று சோசலிச சமத்துவக் கட்சி சுட்டிக் காட்டுகிறது.
ட்ரம்பின் சர்வாதிகார முயற்சிக்கு எதிரான போராட்டத்தை, தொழிலாள வர்க்கத்தின் மீதான ட்ரம்பின் தாக்குதல்களுக்கு உடந்தையாக இருக்கும் ஊழல் நிறைந்த தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பிடியிலிருந்து தொழிலாள வர்க்கத்தை விடுவிப்பதற்கான போராட்டத்துடன் இணைக்க வேண்டும்.
கோவிட்-19 தொற்றுநோயின் பத்தாவது அலையானது, மீண்டும் மருத்துவமனைகளை மூழ்கடித்து, பொது சுகாதாரத்தின் கடைசித் தடயங்களையும் அழிவுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியுள்ளார்.
ரோட்ரிட்கோ டுடெர்ட்டேயின் கைதும் நாடுகடத்தலும், நாட்டின் புவிசார் அரசியல் திசை தொடர்பாக பிலிப்பைன்ஸ் உயரடுக்கிற்குள் நடந்து வரும் அரசியல் போரின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒரு பாலஸ்தீனிய பட்டதாரி மாணவரை தடுத்து வைத்து நாடு கடத்தும் அச்சுறுத்தல் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.
அமெரிக்காவின் மூன்று மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளைக் குறிவைத்து நடத்தப்படும் வர்த்தகப் போர், எதிரிகளுக்கும் பெயரளவிலான கூட்டாளிகளுக்கும் எதிராக உலகப் போருக்குத் தயாராகும் வகையில், உற்பத்தியை மீண்டும் சொந்த நாட்டில் மறுமுதலீடு செய்வதற்கும் அமெரிக்கா மீது அதன் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் உந்துதலின் ஒரு பகுதியாக இது இருக்கிறது.
சிரியாவில் அலவைட் சிறுபான்மையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் படுகொலைகளில் குறைந்தபட்சம் 1,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது, இஸ்லாமிய HTS ஆட்சியை ஆதரித்து சட்டப்பூர்வமாக்குகின்ற நேட்டோ சக்திகளின் குற்றத்தன்மையை அம்பலப்படுத்துகிறது.
ஐரோப்பிய சக்திகள் ஆயுத பலத்தின் மூலம் தங்கள் சொந்த ஏகாதிபத்திய நலன்களைப் பின்தொடர திரும்புவதற்குத் தயாராகி வருகின்றபோது, "சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கின்" முடிவைக் குறித்து பேசுகின்றனர்.
பங்குனி 7ம் திகதி வெள்ளியன்று இடம்பெற்ற "அறிவியலுக்காக எழுந்து நில்" போராட்டங்கள், பாசிச ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் பெருவணிகங்களின் கோரிக்கைகளை திணிப்பதில் முழு அர்ப்பணிப்புடன் இருக்கின்ற போதிலும், தனது அரசாங்கம் இலங்கையின் “பொருளாதார இறையாண்மையை” ஸ்தாபிக்க விரும்புவதாக திசாநாயக்க அவநம்பிக்கையுடன் கூறினார்.
கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு எதிரான வரிப் போர் காரணமாக, அந்நாடுகளின் பொருளாதாரம் முறையே 5 மற்றும் 3 சதவீதம் வரையான சுருக்கங்களை எதிர்கொள்ளக்கூடும் என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் எச்சரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு வெளிப்படுத்தப்பட்டது அதிகாரத்தில் உள்ள அரசியல் உலகின் பாதாளம் - சமூகத்தை ஆளும் அமெரிக்க தன்னலக்குழுவின் உருவம் வெளிப்பட்டது.
சுகாதார ஊழியர்கள், இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஏனைய தொழிலாளர் பிரிவினருடன் ஒன்றிணைந்து, தங்கள் அரசியல் மற்றும் தொழில்துறை வலிமையை அணிதிரட்டுவதன் மூலமே தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.
ஜனநாயகக் கட்சிக்கு ட்ரம்புடன் ஒரேயொரு குறிப்பிடத்தக்க மோதல் மட்டுமே உள்ளது—அது உக்ரேனில் ரஷ்யாவுடன் போரைத் தொடர்வது தொடர்பாகும்.
மேலதிக நேர மற்றும் பொது விடுமுறை ஊதிய விகிதங்களில் அரசாங்கத்தின் கடுமையான வெட்டுக்களாலும் பதவி உயர்வுக்கு நீண்ட காலக்கெடுவை விதிப்பதாலும் தாதிமாரும் ஏனைய சுகாதார ஊழியர்களும் கோபமடைந்துள்ளனர்.
சமரசத்திற்கான முயற்சிகள் என்னவாக இருந்தாலும், லண்டன், பாரிஸ் மற்றும் பேர்லினுக்கு என்ன சிரமங்கள் ஏற்பட்டாலும், அவற்றின் திசை வாஷிங்டனுடன் பகிரங்க மோதலை நோக்கியே உள்ளது.
சாம்சங் தொழிலாளர்கள் நிரந்தர, ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, அவர்களின் போராட்டத்தை விரிவுபடுத்தப் போராடும், ஒரு சுயாதீன தொழிலாளர் நடவடிக்கை குழுவை உருவாக்குவதன் மூலம், போராட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வர்த்தக மற்றும் உற்பத்தி கொள்கைக்கான மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டவரும், கடுமையான சீன-எதிர்ப்பாளராக அறியப்பட்டவருமான பீட்டர் நவரோவால் இந்த போர் திட்டம் பெரும்பாலும் வரையப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி வான்ஸ் ஆகியோர், உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் மோதிக்கொண்டனர். இது, உக்ரேனில் போர் தோல்வியால் ஏற்பட்ட நெருக்கடியையும், அமெரிக்காவிற்கும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களையும் அம்பலப்படுத்துகிறது.
அமேசான் முதலாளி, வாஷிங்டன் போஸ்ட்டின் தலையங்கப் பக்கங்கள் தடையற்ற "சுதந்திர சந்தைகளுக்கு", அதாவது முதலாளித்துவத்திற்கு விரோதமான எந்தவொரு கருத்தையும் விலக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார்.
மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதலானது, சியோனிசக் குடியிருப்புகளை விரிவுபடுத்துவதற்கும் மேற்குக் கரையை இணைப்பதற்குமான ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. 1993 ஆம் ஆண்டு ஒஸ்லோ ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டை முழுமையாகக் கொண்ட மற்றும் பாலஸ்தீனப் பிரதேசத்தின் 60 சதவீத பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதி C இலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
2025-26 இந்திய வரவு-செலவுத் திட்டம், ஏழை தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கான சமூக செலவினங்களைக் குறைக்கின்ற அதே நேரம், பெரும் நிறுவனங்களுக்கு அதிகமான மானியங்கள், சில பணக்காரர்களுக்கு வரி விலக்குகள் கொடுத்துள்ளதோடு இராணுவ செலவினங்களை அதிகரித்துள்ளது.
வெடிக்கும் வர்க்க மோதல்களுக்கு வழிவகுக்கும் ஒரு ஆழமான அரசியல் மற்றும் சமூக நெருக்கடியின் விளைவுகளே, பிப்ரவரி 23 அன்று நடந்த ஜேர்மன் கூட்டாட்சித் தேர்தல்களின் முடிவுகளாகும்.
உக்ரேன் போர் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் ஆத்திரமூட்டலையும், போரை தீவிரப்படுத்துவதையும் நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்திய கதைகள், பொய்களின் மூட்டையாக அம்பலப்பட்டு வருகின்றன.
ஜேர்மனியில் இடம்பெற்ற 2025 கூட்டாட்சி தேர்தலானது, ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும் அரசியல் நெருக்கடியை ஆழப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, பாசிசம், இராணுவவாதம் மற்றும் சமூக வெட்டுக்களுக்கு எதிராகப் போராட விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முன், அடிப்படை அரசியல் பணிகள் முன் வைக்கப்படுகின்றன.
எலோன் மஸ்க்கின் அரசு செயல்திறன் துறையால் (DOGE) ட்ரம்ப் நிர்வாகம் கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யப்படுவதை தடுப்பதற்கான பாரிய நடவடிக்கைக்கு சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) அழைப்பு விடுக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத இந்தத் தாக்குதல் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அனைத்து தொழிலாளர்களுக்கும் பேரழிவுகரமான விளைவுகள் ஏற்படும்.
80 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்றாம் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதல்முறையாக, நாஜிக்களுடன் நேரடியான சித்தாந்த தொடர்ச்சியைக் கொண்ட ஒரு கட்சி அரசாங்கத்தில் நுழைவதற்கான ஒரு நிஜமான சாத்தியக்கூறு உள்ளது.
ரஷ்யாவுடன் இராஜதந்திர உறவுகளை மீண்டும் திறப்பதன் மூலமாக, ட்ரம்ப் நிர்வாகம் ஐரோப்பாவிலோ அல்லது உலகிலோ அமைதியை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று யாரும் தவறாக நம்பக்கூடாது. மாறாக, ட்ரம்ப் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு பயன்படுத்தவும், இறுதியில் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் மைய இலக்கான சீனாவின் மீது கவனத்தை குவிக்கவும், ஐரோப்பிய அரங்கில் இருந்து இராணுவ ஆதாரவளங்களை மறுநிலைநிறுத்த முனைந்து வருகிறார்.
இப்போது, இளைஞர்களும் மாணவர்களும், முதலாளித்துவ முறைமையை தூக்கிவீசும் வரலாற்றுத் திறன் கொண்ட சர்வதேச தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து, தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கமொன்றை சர்வதேச அளவில் கட்டியெழுப்புவதற்கு ஒன்றுபடுவது அவசியமாகும்.
ட்ரம்பின் மீள்வருகையானது, அமெரிக்க சமூகத்திலுள்ள தன்னலக்குழுவின் தன்மைக்கு பொருத்தமான வகையில், அரசியல் மேற்கட்டுமானத்தின் வன்முறையான மறுஒழுங்கமைப்பைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதை, கடந்த நான்கு வார நிகழ்வுகள் ஊர்ஜிதம் செய்துள்ளன.
தொழிலாளர் வர்க்கம் இந்த இனவாத பிரச்சாரத்தை எதிர்த்து, அனைவரின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஒற்றுமைக்காகப் போராட வேண்டும்.
இந்தப் புகைப்படக் கட்டுரை கொழும்பு துறைமுகம், களஞ்சியசாலைகள், தலைநகரின் பழமையான மற்றும் மிகப்பெரிய சந்தையான புறக்கோட்டைக்கு (Pettah) இடையில் பொருட்களை கொண்டு செல்வதில் பிரத்தியேகமாக ஈடுபட்டுள்ள தொழிலாளர்களான நட்டாமியின் வேலை வாழ்க்கையின் ஒரு பார்வையை வழங்குகிறது.
ட்ரம்புக்கான ஐரோப்பிய எதிர்வினையானது, அவரது சொந்த பாசிசக் கொள்கைகளை விட குறைவான பிற்போக்குத்தனமானது அல்ல. இது மீள்ஆயுதபாணியாக்குதல், மீண்டும் மீள்ஆயுதபாணியாக்குதல், இன்னும் அதிகமாக மீள்ஆயுதபாணியாக்குதல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
கடந்த வார இறுதியில், வெள்ளை மாளிகையின் அணுகுமுறை ஒரு எக்ஸ்/ட்விட்டர் பதிவில் சுருக்கமாக கூறப்பட்டுள்ளது. அதில் ட்ரம்ப், "தனது நாட்டைக் காப்பாற்றுபவர் எந்த சட்டத்தையும் மீற மாட்டார் " என்று அறிவித்தார். இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஹிட்லரின் ஃபியூரர் (Fuhrer) கோட்பாட்டால் உத்வேகம் பெற்ற ட்ரம்ப், அனைத்து சட்ட கட்டுப்பாடுகளும் இல்லாத ஒரு சர்வாதிகாரியாக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்கிறார்.
ஐரோப்பிய சக்திகள் ஜனநாயகத்தின் கோட்டைகளோ அல்லது ட்ரம்பின் சூழ்ச்சிகளால் பலியான அப்பாவி சக்திகளோ அல்ல. ஆனால், அமெரிக்காவில் ட்ரம்பின் எழுச்சியானது, உலகளாவிய நிகழ்ச்சிப் போக்குகளின் ஒரு வெளிப்பாடான நிகழ்வாகும்.
மெக்சிகோ மற்றும் கனடாவுக்கு எதிரான வரிவிதிப்புகளை இடைநிறுத்திய பின்னர் பெய்ஜிங் சலுகைகளைப் பெறக்கூடும் என்று பெய்ஜிங் நம்புகின்ற நிலையில், சீனாவின் பதிலடி"மௌனமாக" மற்றும் "கணக்கிடப்பட்டதாக" இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளது.
சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப உயருகின்ற போதுமான ஊதியத்துடனான ஓய்வுதியம் கொண்ட மற்றும் கண்ணியமான தொழிலைப் பெறுவதற்கான, வேலையற்ற பட்டதாரிகளின் உரிமையைப் பாதுகாக்கின்றன.
அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்பு 2022 பாணியிலான வெகுஜனப் போராட்டமாக மீண்டும் வெடிக்கக்கூடும் என்று ஆசிரியர் தலையங்கங்கள் சுட்டிக்காட்டுவது, அவற்றை அடக்குவதற்குத் தயாராகுங்கள் என்ற செய்தியை அரசாங்கத்திற்கு அனுப்புவதற்கே ஆகும்.
உக்ரேனின் கனிம வளத்தின் மீதான கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான ட்ரம்பின் திமிர்பிடித்த முயற்சி, ஏற்கனவே நூறாயிரக்கணக்கானவர்களின் உயிர்களைப் பலிகொண்ட ஒரு போரின் பின்னணியில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்கள் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாகும்.
அமெரிக்கா காஸாவை "சொந்தமாக்கும்" என்று அறிவிப்பதன் மூலம், ட்ரம்ப் காலனித்துவ காட்டுமிராண்டித்தனம் மற்றும் கொடூரத்தின் ஒரு புதிய சகாப்தத்தை பிரகடனம் செய்துள்ளார். அதில் ஒட்டுமொத்தமாக, மில்லியன் கணக்கான மக்கள் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் பலிபீடத்தில் பலியிடப்படுவார்கள்
"சட்ட எல்லைக்கு அப்பாற்பட்ட இடமாக" விவரிக்கப்படும் கியூபாவின் குவாண்டனாமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில், ஆவணமற்ற 30,000 புலம்பெயர்ந்தோரை தடுத்து வைக்க ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ட்ரம்பும் எலோன் மஸ்க்கும் சமூக அழிப்பு மற்றும் நிர்வாக சர்வாதிகாரம் என்ற தங்கள் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லும்போது, ஜனநாயகக் கட்சி முடங்கிப் போயுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகம் “உண்மையை அறிவதற்கான நமது வாய்ப்பைத் தடுத்து வருகிறது. அரசாங்கம் சொல்வதை மட்டும் நாம் கேட்க வேண்டுமா? கூட்டங்களுக்கு இதுபோன்ற தடைகள் இருப்பதாக நாங்கள் இதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை, இதை எதிர்த்துப் போராட வேண்டும்.” – ஹர்ஷா
கடந்த ஒரு வாரமாக, H5N1 "பறவைக் காய்ச்சல்" பெருந்த தொற்றின் தொடர்ச்சியான அபிவிருத்திகள் உடனடி அபாயத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இதற்கு அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவம் முற்றிலும் தயாரிப்பின்றி உள்ளன.
கடந்த வியாழனன்று, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ட்ரம்பின் திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாரிப்பு செய்யுமாறு இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
முக்கிய அமெரிக்க செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான Nvidia இன் பங்குகள் ஜனவரி 26, 2025 அன்று 17 சதவிகிதம் சரிந்தன, இது வரலாற்றிலேயே ஒரு நிறுவனத்தின் சந்தை மூலதனமயமாக்கலில் மிகப் பெரிய ஒரு நாள் இழப்பு ஆகும்; சீன நிறுவனமான டீப்சீக் (DeepSeek) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மலிவான முறையில் உற்பத்தி செய்திருப்பதாக அறிவித்ததையடுத்து இது நிகழ்ந்துள்ளது
காஸாவை இனரீதியில் சுத்திகரிப்பதற்கான ட்ரம்பின் திட்டம், ஏகாதிபத்திய சக்திகளால் காலனித்துவவாதம் மற்றும் இனப்படுகொலையை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.
கடந்த செவ்வாயன்று வாஷிங்டனில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காஸா பகுதியை முழுமையாக இனச்சுத்திகரிப்பு செய்யவும், அதன் அனைத்து கட்டிடங்களையும் தரைமட்டமாக்கவும், அமெரிக்கா அந்தப் பகுதியை இணைத்துக் கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
ஜனநாயகக் கட்சியினரின் முதன்மையான அக்கறை, ட்ரம்பிற்கு எதிரான எந்தவொரு உண்மையான எதிர்ப்பை நசுக்குவதும், நாடெங்கிலும் உள்ள அவர்களின் பாசிச சகாக்களுடன் ஒத்துழைப்பைப் பேணுவதும் ஆகும்.
சமூக பாதுகாப்பு காசோலைகள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளை திருப்பிச் செலுத்துதல் உட்பட அனைத்து கூட்டாட்சி கொடுப்பனவுகளில் 90 சதவீதத்தை செயல்படுத்தும் கருவூலத்துறையை, தேர்ந்தெடுக்கப்படாத பில்லியனரின் கட்டுப்பாட்டிற்கு ட்ரம்ப் வழங்கியுள்ளார்.
பெருவணிகங்களை "பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரம்" என்று பாராட்டிய ஜனாதிபதி, அரச துறையில் துரித தனியார்மயமாக்கல் மற்றும் ஆட்குறைப்பை சுட்டிக்காட்டினார் காட்டினார்.
காஸா மீதான இன சுத்திகரிப்பு மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்க-இஸ்ரேலியப் போரை விரிவுபடுத்துவது குறித்து விவாதிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த வாரம் ட்ரம்புடன் விரிவான தொடர் சந்திப்புகளுக்காக நெதன்யாகு வாஷிங்டன் டி.சி.க்கு வந்தடைந்துள்ளார்.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் உள்ள தொழிலாளர்கள், தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போரில் தத்தமது ஆளும் வர்க்கங்கள் மற்றும் அரசாங்கங்களுக்குப் பின்னால் தங்களை கட்டி வைக்கும் அனைத்து முயற்சிகளையும் உறுதியாக எதிர்க்க வேண்டும்.
அரசாங்கம் பல்கலைக்கழகத்தில் இரு தரப்பினரையும் பாதிக்கும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையேயான முரண்பாடுகள், குற்றச்சாட்டுக்கள் மற்றும் எதிர்க் குற்றச்சாட்டுகளை பயன்படுத்திக்கொள்ளும் என நாம் எச்சரிக்கின்றோம்.
இந்த விமானங்களின் மோதல் தொடர்பான முழு விவரங்கள் மேலும் வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில், பேரழிவு, அதைத் தொடர்ந்து வந்த அரசியல் உட்பூசல்கள், மூடிமறைப்புகள் என்பன, ஏற்கனவே அமெரிக்காவில் ஒரு பெரிய அரசியல் நெருக்கடி மற்றும் ஸ்திரமின்மையை அம்பலப்படுத்தி, குறுக்கிட்டு வருகின்றன.
உலக பில்லியனர்களின் செல்வம் 2024 இல் $13 டிரில்லியன் டாலரிலிருந்து $15 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது, இது 2023 ஐ விட மூன்று மடங்கு வேகமாக உள்ளது என்று ஒரு தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜேர்மன் பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, பிரதான பாராளுமன்ற குழுக்களில் ஒன்று, ஒரு எதேச்சதிகார மற்றும் இனவாத மசோதாவை நிறைவேற்ற உதவுவதற்காக பாசிஸ்டுக்களுடன் கைகோர்த்துள்ளது.
நாஜிக்களின் ஆவுஷ்விட்ஸ் வதை முகாம் விடுதலை பெற்று எண்பது ஆண்டுகளுக்குப் பிறகும், இனப்படுகொலை, மில்லியன் கணக்கான மக்கள் அவர்களின் மூல வழித்தோன்றல் காரணமாக துன்புறுத்தப்படுவது, போர் மற்றும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் என்பன மீண்டும் இயல்பாக்கப்பட்டு வருகிறது.
2021 மார்ச் மாதம், ஓல்டன் தோட்டத்தின் 38 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதோடு அவர்களில் 22 பேர் போலி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். நான்கு ஆண்டுகள் கடந்த பின்னர், தொழில் நீதிமன்றம் அவர்களை மீண்டும் வேலையில் அமர்த்த மறுத்து விட்டதுடன் அந்த 22 பேர் இன்னும் நீதிமன்ற வழக்குகளில் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர்.
ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் தலைவர்கள், ட்ரம்பை எதிர்த்துப் போராடத் தாங்கள் "சக்தியற்றவர்கள்" என்றும், அவரது செயல்களின் வேகத்தைக் கண்டு "அதிர்ச்சியடைந்துள்ளனர்" என்றும் பொய்யாகக் கூறி வருகின்றனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பேரழிவுக் காட்சிகளுடன் மட்டுமே காஸாவிலுள்ள படங்களை ஒப்பிட முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 92 சதவீத குடியிருப்புகள் கடுமையாகவோ அல்லது பகுதியாகவோ காஸாவில் சேதமடைந்துள்ளன.
டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற ஒரு வாரத்தில், அவருக்கு முன்னர் எந்த ஜனாதிபதியும் ஒருபோதும் முயற்சிக்காததைச் செய்வதற்கு ஜனாதிபதி பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார்: அது, அரசியலமைப்பைத் தலைகீழாக மாற்றி ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுதல் ஆகும்.
கடந்த சனிக்கிழமையன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாலஸ்தீனத்தில் இனச் சுத்திகரிப்புக்கு வெளிப்படையாக, காஸாவை அதன் அரபு குடியிருப்பாளர்களிடமிருந்து "தூய்மைப்படுத்த" இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்தார்.