ஜே.வி.பி. தொழிற்சங்கத் தலைவர்கள் குண்டர் பலத்தைப் பயன்படுத்தி, ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் போராட்டத்தைக் குழப்ப முயன்றதைக் கண்டிப்போம்!
சுகாதார ஊழியர்கள் குழுவொன்றின் போராட்டத்திற்கு எதிரான ஜே.வி.பி.யின் குண்டர் மிரட்டல்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என நாம் தொழிலாள வர்க்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த அத்துமீறலானது, தொழிலாளர் போராட்டங்களை சட்டத்தினாலும் பொலிஸ்-இராணுவ பாய்ச்சலினால் மாத்திரமன்றி, குண்டர் பலத்தைப் பயன்படுத்தியும் ஒடுக்கப் போவதாக விடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கையாகும்.
