விமானம் தாங்கி போர்க்கப்பல் படைப்பிரிவை அரபிக் கடலுக்கு அனுப்பி புதிய அச்சுறுத்தல்களை ட்ரம்ப் விடுத்துள்ளதால், ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் விரைவில் நிகழக்கூடும் என்று தோன்றுகிறது
கடந்த புதன்கிழமை அன்று, ஈரான் மீதான இராணுவத் தாக்குதல் மிக அருகில் இருப்பதை ட்ரம்ப் உறுதிப்படுத்தினார். அப்போது, USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் தலைமையிலான கடற்படை, வெனிசுவேலா ஜனாதிபதியை கடத்துவதற்கு முன்பு வாஷிங்டன் நிலைநிறுத்திய படையை விடப் பெரியது என்று கூறிய அவர், இப்படை "தேவைப்பட்டால் அதன் பணிகளை மிக வேகமாகவும் வன்முறையுடனும் உடனடியாக நிறைவேற்றத் தயாராக உள்ளது" என்றும் குறிப்பிட்டார்.
